வெள்ளி, 12 நவம்பர், 2010

ஒபாமா... ஒபாமா... இந்தியா ஒபாமா...!!

ஒபாமா... இந்தியாவின் அரசியல்வாதிகளில் ஒருவராக இருந்தால் எப்பூடி இருக்கும் ??? இப்பூடி தானுங்கோ இருக்கும்...!! 

புதுசு கண்ணா புதுசு...!! தினுசு கண்ணா தினுசு....!!

நாளாந்தம் புதுசு புதுசா கையடக்க தொ(ல்)லைபேசிகள் வந்து கொண்டே தான் இருக்கு.. வருங்காலத்தில இப்படியான தொ(ல்)லைபேசிகள் கூட வரக்கூடும்....

திங்கள், 26 ஜூலை, 2010

மாற்றி யோசி…..

வழமையாக நாங்கள் செய்கின்ற விடயங்களை சற்று மாற்றி யோசித்தால் புதிய பல விடயங்களை நாம் செய்யக்கூடியதாக இருக்கும் அல்லவா?
அந்தவகையில் வழமையாக நாங்கள் பயன்படுத்துகின்ற 'கேக்' வகைகளை வித்தியாசமாக அழகுபடுத்தினால் எப்படி இருக்கும் என மாற்றி யோசித்துப் பார்த்தபோது உருவானவையே இந்த கேக்குகள்.





திங்கள், 28 ஜூன், 2010

காற்றலையில் கலந்து ஆண்டுகள் ஒன்று பூர்த்தி.....!!!


இன்று என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள் ஆகும். காரணம் காற்றலையோடு நானும் இரண்டரக் கலந்து இன்றோடு ஆண்டொன்று பூர்த்தியாகின்றது. இந்த வருடமொன்று எப்படி உருண்டோடியது என்று தெரியவில்லை. அவ்வளவு வேகமாக சென்றுவிட்டது. திரும்பி வந்த பாதையை மீட்டுப் பார்த்தால் இதில் இன்பமும், துன்பமும் நிறைந்த பல சுவடுகளைக் காணக்கூடியதாக உள்ளது.

நினைத்துப் பார்க்கும் போது அது இன்று காலை பூத்த தாமரைப்பூப் போன்று மனதிற்கு புதிய உற்சாகத்தை தருகின்றது. அந்த உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மேலும் மகிழ்ச்சியடைகின்றேன்.

கடந்த வருடம் 2009ம் ஆண்டு ஜுன் மாதம் 27ம் திகதி என் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை புரட்டி வைத்த நாள் என்று சொல்லலாம். நான் அக்னி fm க்கு அறிவிப்பாளர் கற்கை நெறியை கற்கச் சென்று சில வாரங்களுக்குள்ளேயே ஆசிரியர்/நிகழ்ச்சிப் பொறுப்பதிகாரி என் குரலையும் காற்றலையில் கலந்திட அனுமதித்தார். முதன்முறையாக ஜுன் 27ம் திகதி மாலை 4 மணிக்கு "Akkni.com" நிகழ்ச்சியினூடாக காற்றலையில் கலந்தேன்.

அப்போது என்னுடன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய சுஹைல் அண்ணாவையும், இன்று எனது வெற்றிப் பயணத்திற்கு வித்திட்டவரான ஆசிரியர் சரவணபவன் அண்ணாவையும் இவ்விடத்தில் நினைவு கூறக் கடமைப்பட்டுள்ளேன். அன்று ஆரம்பித்த எனது ஊடகத்துறை வாழ்க்கை பல விருதுகளையும் வாங்க வைத்தது.




Akkni fm இன் "அக்னி விருது வழங்கும் விழா 2009" இல் வளர்ந்து வரும் சிறந்த 8 அறிவிப்பாளர்களில் நானும் ஒருவனாக தெரிவுசெய்யப்பட்டு, சூரியன் fm இன் நிகழ்ச்சிப் பொறுப்பதிகாரி நவநீதன் அண்ணாவின் கையால் பதக்கம் அணிவிக்கப்பட்டேன்.
அந்த நாட்களை நினைத்துப் பார்க்கின்ற போது அளவில்லா மகிழ்ச்சியடைகின்றேன்.

அத்துடன் நின்றுவிடவில்லை. தொடர்ச்சியாக 8 மணிநேரம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளேன். சிறந்த பாடல்களைத் தெரிவு செய்து நிகழ்ச்சிகளில் ஒலிபரப்புவதில் அனேகரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளேன். அதுமட்டுமல்லாது இறுதியாக Akkni fm இன் 1வது பிறந்த தினத்தை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்ட "Best DJ Of The Month" விருதை தட்டிக்கொண்டதும் மிக்க மகிழ்ச்சி.

அப்படியே தொடர்ந்த என் வாழ்க்கையில் சில மனவிரக்தி தன்மையும் ஏற்பட்டது. காரணம் முன்னணி ஊடகங்களுக்குள் செல்ல வாய்ப்புக்கள் தேடினேன். இருந்தும் அவை கைநழுவிப் போனது. எனினும் ஊடகத்துறை வாழ்க்கையை விட்டு வெளியேறவில்லை. எனது அன்பான நண்பர்களின் அரவணைப்பினாலும், உற்சாகத்தினாலும் தொடர்ந்து முயற்சி செய்தேன். அந்தக் கனவும் நிறைவேறியது.
இன்று ஸ்ரீ தொலைக்காட்சியில் கடமை புரிந்து கொண்டிருக்கின்றேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

Video Editor ஆக, News Reporter ஆக, News Presenter ஆக பல துறைகளிலும் கால் பதித்துள்ளேன் என்பது இந்த ஒரு வருட காலத்தில் நான் செய்த சிறு சாதனைகளாகும். இன்னும் பலவற்றைக் கற்றுக்கொண்டு முன்னோக்கிச் செல்வேன் என்ற நம்பிக்கை இருக்கின்றது……!
சந்திப்போம் உறவுகளே மற்றுமொரு பதிவினூடாக…….!

வாசிக்க வந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள்.

சனி, 1 மே, 2010

காதல் ஜோதிடம் பாக்கலாம் வாங்க.....

உங்கள் காதல் ஜோதிடம் பற்றி அறிய ஆவலா? இதோ 12 ராசிகளுக்குமான பலன்கள்.

மேஷம் - காதல்

இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.

ரிஷபம் - காதல்

ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்.

மிதுனம் - காதல்

மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.

கடகம் - காதல்

இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது.

சிம்மம் - காதல்

சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்.


கன்னி - காதல்

கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

துலாம் - காதல்

எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது. துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.

விருட்சிகம் - காதல்

விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.

தனுசு - காதல்

இவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார். தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்.

மகரம் - காதல்

இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது.

கும்பம் - காதல்

கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.

மீனம் - காதல்

மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னி ராசிக்காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்.

புதன், 28 ஏப்ரல், 2010

கிரிக்கெட் வீரர்களும் அவர்களது மனைவிமாரும்......

காணக்கிடைக்காத கிரிக்கெட் வீரர்களும் அவர்களது மனைவிமாரும் சேர்ந்து எடுத்துக் கொண்டபுகைப்படங்கள்..........

Riana பொண்டிங்


Kellie ஹய்டன்

மதிமலர் முரளிதரன்

அஞ்சலி டெண்டுல்கர்

Vijeta Dravid


Andrea Hewitt Kambli

உமா வாசிம்

வாசனா வாஸ்

மெல் கில்க்கிரிஸ்ட்

ஆர்த்தி செஹ்வாக்

டோனா கங்குலி

சைலஜா லக்ஸ்மன்

Tenielle Gibbs

Kim Waugh

Lynette Waugh

ஜேன் மக்ராத்

கிறிஸ்டின ஜெயவர்தனே

யேஹலி சங்கக்கார


ஜெசிக்கா Pieterson

ரசெள்ளே ப்ளிண்டோப்ப்

ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க சில ஐடியாக்கள்

ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. இந்த பிரச்சனை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு....

1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்' ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..

2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட் )

3. அவங்க பேரோட முதல் எழுத்தை பைக் கீ- செயின்'ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க...

4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக் விடணும்'ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)

5. அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கால் பண்ண சொல்லுங்க. அந்த பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.

6. கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்'ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

7. "நீ ரொம்ப அழகா இருக்கே"ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)

8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஆர்டர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்'ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)

9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், " இந்த ட்ரஸ்'ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு பொய் சொல்லணும்". (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)


10. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.

இந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வெச்சு கொண்டாடுவாங்க.