புதன், 25 மார்ச், 2009

தேவதை

ஓர் நொடியை பல யுகங்களாலும்
பல ஆண்டுகளை சில சொடிகளாலும்
மாற்றும் அபூர்வ தேவதை நீயே...

என் அருகில் நீ இருக்கும்
யுகங்கள் எல்லாம் நொடியாய் கரைவதென்னடி...
நீ அருகில் இல்லாத நொடிகள் கூட
யுகமாய் வலிப்பதென்னடி???

உன் கண்கள் பேசும் ஒவ்வோர் வார்த்தையும்
ஒவ்வோர் காவியமடி...
காவியத்தை கற்க விரும்பும்
இலக்கிய மாணவனடி நான்...

கண்ணாடி

கண்ணாடிக்கு கண்கள் இல்லாதது நலமே…
என்னைக் கண்டால் எட்டிக் குத்தியிருக்கும்…
அது கூட பரவாயில்லை…
உன்னைக் கண்டால் எட்டி முத்தமல்லவா இட்டிருக்குமடி…