செவ்வாய், 26 ஏப்ரல், 2011

இப்படியும் ஒரு மழைபாட்டு.....!!

வழமை போலவே இன்று காலையும் வேலைக்கு செல்ல ஆயத்தமானேன்.. இடி, மின்னலோடு மழையும் பெய்து கொண்டிருந்தது.. அதனால் கொஞ்சம் தாமதித்தே வீட்டில் இருந்து கிளம்ப வேண்டியிருந்தது. வீட்டுப்பக்கம் உள்ள வீதிகள் எல்லாம் மிகத்தரமானவை என்பது தெரிந்ததால் எதுக்கும் முச்சக்கர வண்டியில் செல்வதே மேல் என்று தோணியது. அருகில் நின்றுக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் ஏறி பஸ் தரிப்பிடம் செல்லும் படி ஓட்டுனரிடம் கூறி ஏறிக்கொண்டேன்.. அவரும் என்னைபோலவே கொஞ்சம் அட்வான்ஸ் ஆக யோசிப்பவர் போல, தம்பி உங்களை நான் ஸ்டான்ட்டிலேயே விட்டு விடுறேன் அப்போ உங்களுக்கு இருந்து செல்ல முடியும் என்று 141 ஆம் இலக்க பஸ் பயணத்தை ஆரம்பிக்கும் இடமான மனிங் பிளேசில் இறக்கிவிட்டார். சரியென்று நானும் அடுத்து செல்ல இருந்த பஸ்ஸில் ஏறினேன்.. ஏறி இருந்து கொண்டு பஸ்ஸில் சத்தமாக சென்று கொண்டிருந்த சகோதர மொழி பாட்டை கேட்டேன்... இன்றைய மழையுடன் கூடிய கால நிலைக்கு பொருத்தமான அருமையான பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அதிலும் "ஓ..... வஸ்ஸ வைனவா.... ஓ..... வஸ்ஸ வைனவா...." ரொம்பவும் பிடித்து விட்டது.. அழகாக மழை பெய்யும் 0போது இடம்பெறும் விடயங்களை எடுத்துக்காட்டியது அப்பாடல்...! வாய்க்கால்களில் தாராளமாக நிரம்பி வழிவதும், இடி, மின்னல் பற்றியும், சுழல் காற்றினால் மரங்களும் சுழலுகின்றது,சிறிதாக உள்ள தாவரங்களும் பறக்கின்றது. இன்னும் வருண பகவான் கண்ணீர் வடிக்கின்றார் என்று அழகான வரிகளுடன் அமைந்த பாடல்...! கொஞ்சம் பழைய பாடல் என்று நினைக்கின்றேன்...தர்மரட்ன சகோதரர்கள் இணைந்து பாடியது. நீங்களும் அப்பாடலை கேட்டு,பார்த்துத்தான் பாருங்களேன்..!!


கேட்டுப்பார்க்க......,

சரி மீண்டும் ஒரு புதிய பதிவுடன் சந்திப்போம்....!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக