இது இவ்வாறு இருக்கின்ற பொழுது, உலக நாடுகள் (குறிப்பாக) வீடியோ குறித்து இலங்கைக்கு பிரிட்டன் அழுத்தம் இதற்கு எதிர்ப்பும், கவலையும் வெளியிட்டுள்ளனர். இதில் அவர்கள் வைத்தியசாலை மீது தாக்குதல் நடாத்தியதையும், பயங்கர வாதிகள் சுட்டுக்கொல்லப்படுவதையும் பார்த்து, அதிர்ச்சியடைந்ததாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் பிபிசி செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்..
இந்நிலையில்அலிஸ்டயர் பர்ட் கருத்துக்கு இலங்கை அரசு கவலை வேறு தெரிவித்துள்ளது. மேலும் சனல் 4 ஆவணப்படத்தை அரசாங்கம் பரிசோதிக்கும்: அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இலங்கை அரசு சார்பில் கருத்து தெரிவித்துள்ளார்...
அதேவேளை சனல் 4 வீடியோ புலி ஆதரவாளர் நிதியில் தயாரான போலி ஆவணம்: கோட்டாபய தெரிவித்துள்ளார். இதற்கு முன்பும் சனல் இவ்வாறு வீடியோக்களை வெளியிட்டார்கள் எனவும் அவை போலியாக தயாரிக்கப்பட்டவை அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவை இவ்வாறு முரண்பாடான கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இறுதிக்கட்ட யுத்தத்தின் போதான ஐ.நாவின் செயற்பாடு குறித்து மீளாய்வு செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்..
இதேவேளை இரண்டாவது முறையாக பான் கீ மூன் தேர்தலில் களமிறங்கியுள்ளார். இதற்கு அரசு தமது பூரண ஆதரவை பான் கீ மூனுக்கு தெரிவித்துள்ளனர்.
எதற்காக ஆதரவு என்று கேட்டால்...?
1. போர்க்குற்ற விசாரணைக்கு ஒரு முக்காடு போடுவதற்கு..
2. அடிப்படையில் அவரும் பௌத்த மதத்தையும், அது சார்ந்த நாட்டின் பிரஜை என்பதாலும் இருக்கலாம்.
மூனும் அவ்வாறே யோசித்திருக்கலாம்.
இதற்கு பான் கீ மூனின் 2 ஆவது பதவிக்காலத்திற்கு அரசாங்கம் ஆதரவளித்தது ஏன்?: ஐ.தே.க. சார்பில் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் சனல் - 4 வீடியோ தொடர்பான விசாரணை; நல்லிணக்க ஆணைக்குழு முஸ்தீபு தெரிவித்துள்ளது. தாங்கள் அதை பார்வையிட்டு காணொளி தொடர்பாக ஆராயவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.
இவை இவ்வாறிருக்கின்ற பொழுது நேற்றைய தினம் இலங்கையில் சகோதர மொழி தொலைக்காட்சியொன்றில் இரவு பிரதான செய்தியறிக்கையின் போது இது பற்றி பேசப்பட்டது.
செய்தியறிக்கையின் காணொளி
அதில் கூறப்படுவது செய்தி வாசிப்பாளராக காண்பிக்கப்படும் பெண் இசைப்ரியா. விடுதலைப் புலிகளின் கரும்புலியின் ஒரு முக்கிய உறுப்பினர். இது அவருக்கு புலிகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டை.
அடுத்து வினோ.. இவர் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளராக இருக்கும் காஸ்த்ரோ சார்பாக செயற்ப்படுபவர்.. காஸ்த்ரோ என்பவர் விடுதலைப் புலிகளின் தலைவருடன் சரி சமமாக இணைந்து செயற்பட்டவர்.
அடுத்து ரமேஷ்... இவரும் புலிகளின் முக்கிய ஒரு உறுப்பினர். இதைப்பற்றியெல்லாம் சனல் 4 பேசப்பட வில்லை... எமக்கு தெரியும் எமது படையினர் மக்களுக்கு எவ்வாறெல்லாம் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்று......!!
அத்துடன் சரணடைந்த புலி உறுப்பினர்களும், காப்பாற்றப் பட்ட மக்களும் கூறும் கருத்துக்களும்.....!!
அவ்வாறு மக்களுக்காக செய்த சேவைகளும் காட்டப் படுகின்றது.
இவ்வாறு ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்துவதால் இறந்த உயிர்கள் மீளப் போவதில்லை.. போர் என்று வந்தால் அப்பாவி உயிர்கள் பலியாவது இது புதிதல்ல... அரசர் காலம் தொட்டு இவை இடம்பெறுகின்றது, இடம்பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது. ஆண்டுகள் பல கடந்தாலும் இது ஓயப்போவதில்லை..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக