வியாழன், 23 ஜூன், 2011

செவ்வந்தி பூவுக்கும்.. எம்மாமன் பொண்ணுக்கும்...

அண்மையில் வீட்டிலே இருக்கும் போது தொலைக்காட்சியில் பாடகர் தேர்வு நிகழ்ச்சியொன்றை பார்க்க கிடைத்தது. அதில் பங்குபற்றிய ஒருவர் பாடிய பாடல் ஒன்று மிகவும் என்மனதை கவர்ந்தது.

மிக நீண்ட இடைவெளிக்கு பின் அப்பாடலை கேட்க முடிந்தது.
வானொலிகளிலும் அப்பாடல் ஒலித்து நீண்ட காலமே..!! அப்பாடலை பாடியவரும் மிக அற்புதமாயும் பாடி இருந்தார்.
நேற்று தான் அப்பாடலை தேடினேன் இணையத்தில்...

"செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டி காற்றுக்கும் என்பாட்டுனா சந்தோஷம் தான்... என்மாமன் பொண்ணுக்கு.. சிங்கார கண்ணுக்கு.. என் பாட்டுனா சந்தோஷம் தான்..."

இப்பாடலை அந்த மனதை வருடும் இசையுடன் கேட்கும் போது உண்மையில் என்னையே மறந்து விட்டேன்...!
"புத்தம் புது பூவே" திரைப்படத்துக்காக இடம் பெற்ற பாடல் அது.

பாடலுக்கான இசை வழங்கி இருக்கின்றார் எஸ்.ஏ ராஜ்குமார். மிகச்சிறந்த ஒரு இசையமைப்பாளர். பல நூற்றுக்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவரைப் பற்றி பிரிதொரு பதிவில் விரிவாக குறிப்பிடுகின்றேன்.

சரி விஷயத்துக்கு வருவோம்.. யார் அந்த பாடலை பாடியுள்ளார்கள் என்றால் இரண்டு இசைக்குயில்கள் தான் பாடியுள்ளது.
1. ஆண் குரலுக்கு சொந்தக்காரர் உன்னி கிருஷ்ணன்
2. பெண் குரலுக்கு சொந்தக்காரர் மறைந்த பிண்ணனிப் பாடகியான ஸ்வர்ணலதா.

அற்புதமாக இருக்கின்றது பாடல். ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான மெட்டமைத்துள்ளார் ராஜ்குமார். நிச்சயமாக ஒரு சபாஷ் போடலாம். இப்பாடலின் வரிகளை எழுதி இருக்கின்றார் தொல்காப்பியன்.
ஏனைய பாடல் வரிகளை சிநேகன் மற்றும் பிறைசூடன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

சரி நீங்களும் அப்பாடலை கேட்டுப் பாருங்களேன்.

1. செவ்வந்தி பூவுக்கும் (ஆண்) பாடல்...
பாடியவர்கள் :- உன்னி கிருஷ்ணன்
வரிகள்:- தொல்காப்பியன்

2. செவ்வந்தி பூவுக்கும் (பெண்) பாடல்...
பாடியவர்கள் :- ஸ்வர்ணலதா.
வரிகள்:- தொல்காப்பியன்
அத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஏனைய பாடல்கள்...

3. சாமந்தி பூவுக்கும் பாடல்...
பாடியவர்கள் :- ஜெயச்சந்திரன்
வரிகள்:- சிநேகன்

4. அல்பெல்லா பாடல்...
பாடியவர்கள் :- மனோ, அனுராதா ஸ்ரீராம்
வரிகள்:- சிநேகன்

5. ரெட்டை ஜடை பாடல்...
பாடியவர்கள் :- எஸ்.பீ பாலசுப்ரமணியம், அனுராதா ஸ்ரீராம்
வரிகள்:- பிறைசூடன்

6. நிலவில் வீடு பாடல்...
பாடியவர்கள் :- சுனந்தா
வரிகள்:- சிநேகன்

7. காதல் ஒரு பாடல்...
பாடியவர்கள் :- சபேசன்
வரிகள்:- சிநேகன்


நிச்சியமாக நீங்களும் கேட்டு ரசித்திருப்பீர்கள்...!! மீண்டும் ஒரு புதிய பதிவுடன் வெகு விரைவில் சந்திக்கின்றேன் உறவுகளே..!! வருகை தந்தமைக்கு மிக்க நன்றி..!!

பின்னிணைப்பு பாடல் வரி..

"செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டி காற்றுக்கும் என்பாட்டுனா சந்தோஷம் தான்... எம்மாமன் பொண்ணுக்கு சிங்கார கண்ணுக்கு என் பாட்டுனா சந்தோஷம் தான். அம்மாடியோ கொலுசு சத்தம் ஆதாரமா நெஞ்சில் நிக்கும்.. அழகே உன் பெயர் சொன்னால் கவிதை கொட்டும்..!!

செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டி காற்றுக்கும் என்பாட்டுனா சந்தோஷம் தான்... எம்மாமன் பொண்ணுக்கு சிங்கார கண்ணுக்கு என் பாட்டுனா சந்தோஷம் தான்...!!

இருவல்லிக் கொலுசாட.. எச பாட்டு நான் பாட.. கை தட்டும் பூந் தோட்டம் அத கேட்டு தான்.. மழை வெயில் உறவாட மனசெல்லாம் அலை ஓட.. இலை கூட தலை ஆட்டும் நான் பாடினா... நெத்தியில சூரியன ஆற வச்சு பொட்டு வைப்பேன்.. மருதாணியில் மக ராணிய போர்த்தி வைப்பேன்.. மலரே உன் முன்னால தனியா நிப்பேன்....!!

செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டி காற்றுக்கும் என்பாட்டுனா சந்தோஷம் தான்... எம்மாமன் பொண்ணுக்கு சிங்கார கண்ணுக்கு என் பாட்டுனா சந்தோஷம் தான்...!!

மனசெல்லாம் "மா"க்கோலம் நீ போட்ட பூக்கோலம் மலை தண்ணி பட்டாலும் அழியாதம்மா.. நாளெல்லாம் என்கூட நீ பேசி சிரிஷாலே அது போல சுகமேதும் கிடையாதம்மா... கண்ணாடியும் உன்முகத்த கண்ணாடியா பார்க்கும் கண்ணு... என் பாட்டு சொல்லாதத தென்றல் சொல்லும்.. என் உசுரோட உன் பேச்சு ஒளியா மின்னும்...

செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டி காற்றுக்கும் என்பாட்டுனா சந்தோஷம் தான்... அம்மாடியோ கொலுசு சத்தம்.. ஆதாரமா நெஞ்சில் நிக்கும்.. அழகே உன் பெயர் சொன்னால் கவிதை கொட்டும்..!!

செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டி காற்றுக்கும் என்பாட்டுனா சந்தோஷம் தான்...!!!"

1 கருத்து:

Unknown சொன்னது…

no words to explain this feel

கருத்துரையிடுக