புதன், 31 ஆகஸ்ட், 2011

அப்படி+பாக்கல+சும்மா

அப்படி இப்படி

ஒரு ஊர்ல அப்படி இப்படின்னு ரெண்டு பேர். ஒருநாள் அப்படி எப்படி இருக்கீங்கனார்... இப்படி, எப்படியோ இருக்கேன்னார்.. அப்படி, இப்படி சொன்னா எப்படி, அப்படி இருக்கேன் இல்லை இப்படி இருக்கேனு சொல்லுங்கனாறு. உடனே இப்படிக்கு அப்படி ஒரு கோவம்..

நான் எப்படி இருந்தா உனக்கென்னான்னு கேட்டார். அதுக்கு அப்படி, அப்படியெல்லாம் ஒன்னுமில்லீங்க சும்மா எப்படி இருக்கீங்கனு கேட்டேன்னு சமாதான படுத்தினார். அப்படியும் இப்படியும் எப்படியோ பிரன்ஸ் ஆனாங்க. நீங்க எப்படி இருக்கீங்க..??

பாக்கல & கேக்கல

ஒரு கத சொல்லவா..??
ஒரு ஊர்ல 2 பிரண்ட்ஸ். பெயர் "பாக்கல & கேக்கல " 1day பாக்கல கூப்பிட்டது கேக்கலைக்கு கேக்கல. So பாக்கலைக்கு சொன்னிச்சா பாக்கலையா..?? then கேக்கல say ஏன் பாக்கலேன்னு ?பாக்கலேகிட்ட! அத கேக்கலைக்கு கேக்கவே இல்லை. அப்புறம் பாக்கல சொன்னதா ஏன் கேக்கலன்னு கேக்கலகிட்ட.. பாக்கல upset ல அத கேக்கல.Totally பாக்கல கேக்கல. கேக்கல பாக்கல!!! R U OK? Cool. இப்போ நான் எண்ட கதைய எப்படி இருக்குன்னு நான் உங்ககிட்ட கேக்கல.. எப்பூடி?


சும்மா சும்மா

சும்மா இருகிறவன் சும்மா இல்லாம சும்மா இருக்குறவங்களுக்கு சும்மா சும்மா SMS அனுப்பினா சும்மா இருக்குறவங்க சும்மா சும்மா SMS படிச்சுட்டு சும்மா இல்லாம அதை சும்மா நாலு பேருக்கு அனுப்புவாங்க. சும்மா சொல்றேன்னு இப்போ நீங்க சும்மா இருந்துடாதீங்க.

சும்மா இருக்குறவங்களுக்கு இந்த மசெஜை Forward பண்ணுங்க. இல்லேனா சும்மா இருங்க. சும்மா தான் சொன்னேன்... அதுக்கு போய் இப்படி சும்மா கோபப்பட்டா எப்படி...?? எனக்காக சும்மா சிரிச்சதுக்கு thanks. சும்மா போரடிச்சுது. அதுதான் இப்படி சும்மா ஒரு பதிவு... ஓகே யா...??

சனி, 20 ஆகஸ்ட், 2011

மினி சினிமா

வணக்கம் உறவுகளே...!! வாரா வாரம் மினி சினிமா பகுதியூடாக தமிழ் குறுந் திரைப் படங்களை உங்களுடன் பகிர்ந்து வருகின்றேன். அந்த வகையில் இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் திரைப்படம் நண்பா.

இரு பாடசாலை மாணவர்களுக்கிடையில் உள்ள நட்பை வெளிப்படுத்தும் படம். சந்தீப் மற்றும் சந்தோஷ் பரீட்சையில் அதிக புள்ளி எடுத்த சந்தோஷ்க்கு ஆசிரியர் சாக்லெட் கொடுக்கின்றார்.அருகில் இருக்கும் சந்தீப்கும் கொடுத்துண்ணுமாறு கூறுகின்றார்.


அந்த நேரம் சபதம் கொள்கின்றான் சந்தீப். அடுத்த பரீட்சையில் அதிக மதிப்பெண் எடுப்பேன் என்று...இந்த இரு மாணவர்களில், அடுத்த பாடசாலை பரீட்சையில் அதிக புள்ளி யார் எடுக்கிறார்...?? என்பதுதான் படத்தின் சுருக்கம்.
அழகான நட்பை வெளிப்படுத்தும் திரைப்படம். நீங்களும் தவறாது பாருங்கள்.... சிறுவர்களுக்கு பயன்னுள்ள ஒரு திரைப்படம்...


எழுத்தாளர் மற்றும் இயக்குனர் - ரோஹின் V
தயாரிப்பாளர் - L V பிரசாத் திரைப்பட அகடமி
ஒளிப்பதிவாளர் - இவாணி சசி வதனா
ஆசிரியர் - பிரசன்னா ஜி கே
ஒலி - ஹரே கிருஷ்ணா மஹாத்தோ
இசை மேற்பார்வையாளர் - சமந் நாக்
ஆடை - கணேஷ் கார்த்திக்

நடிகர்கள்
சந்தீப் - கவுரவ்
சந்தோஷ் - ராஜ் மோகன்

இந்த திரைப்படம் பல விருதுகளை வென்றுள்ளது. அது தொடர்பான விபரம் வருமாறு..

- Won two gold medals for Best Editing and Sound design respectively at L.V.Prasad Film and TV Academy, Chennai,2008
- Won the third prize for the best short fiction in the film fest organized by Ashvita art gallery, Chennai, 2008
- Won the second prize for the best short film in the film fest organized by St.Teresa's College, Ernakulam, 2008
- Won the Best editing award Bimbam film fest organized by Hindhusthan College, Coimbatore, 2008
- Won a special category award for Best Acting in the International Short Film Festival organized by Don Bosco Institute of Communication and Arts, Chennai, 2009
- Won the best editing award at the short film festival conducted by Radio Maja, Chennai, 2009
- Official selection and the only Indian film to participate in the International section at the Sehsuechte International short film competition, Potsdam, Germany, 2009
- Official selection the 9th International student Film festival, MSSF 09, Pisek, Czech republic, 2009
- Won the 'Council General' prize for the best short film at the Court Metrage - 20th International student short film festival of Cergy--Pontoise by TYO Ensea, France, 2010

மீண்டும் அடுத்த வாரம் மற்றுமொரு மினி சினிமாவில் சந்திக்கின்றேன்...!!

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

நெஞ்சில் நின்ற ராகம்

வணக்கம் உறவுகளே...!! வாரா வாரம் நெஞ்சில் நின்ற ராகம் பகுதியூடாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.. அந்த வகையில் இந்த வாரமும் ஒரு இனிய மனது மறக்காத இடைக்கால பாடல் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.
இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் பாடல். "செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா..."

பாடல் வரி...

செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா...
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா...
இரு கரை நீரிலே தன் நிலை மீறியே
ஒரு கதி போல என் நெஞ்சம் அலை மோதுதே எஎஎய் ...

ஓஓஓஓ செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா..
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா...


வெண் பனி போல கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன்
அழகான வெள்ளைகிந்கெய் களங்கங்கள் இல்லை
வெண் பனி போல கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன்
அழகான வெள்ளைகிந்கெய் களங்கங்கள் இல்லை
அதுதானே என்றும் இங்கே நான் தேடும் எல்லை
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா..
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா....

மின்னலை தேடும் தாழம்பூவே
உன் எழில் மின்னல் நானே
பனி பார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே
மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே
பனி பார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே
உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காக தானே
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா..
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா....

அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை
நிழல் தேடும் சோலை ஒன்றை விழி ஓரம் கண்டே ன்
அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை
நிழல் தேடும் சோலை ஒன்றை விழி ஓரம் கண்டேன்
நிழலாக நானும் மாற பறந்தோடி வந்தேன்
அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை
நிழல் தேடும் சோலை ஒன்றை விழி ஓரம் கண்டேன்
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா..
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா...


இந்தப் பாடல் 1988 ஆம் ஆண்டு செந்தூரப் பூவே என்னும் திரைப்படத்துக்காக P.R. தேவராஜ் இயக்கத்தில், விஜயகாந்த், ராம்கி, நிரோஷா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்.. இந்த திரைப்படத்துக்கு மனோஜ் கயன் இசையமைத்துள்ளார்.
இந்த அழகான பாடலுக்கு குரல் கொடுத்திருக்கின்றார்கள் s.p பாலசுப்ரமணியம், சசிரேகா ஆகியோர். இந்த திரைப்படத்தை இயக்கியதுக்காக P.R. தேவராஜுக்கு தமிழ் நாட்டின் சிறந்த இயக்குனருக்கான விருதும் அத்துடன் இந்த திரைப்படத்தில் நடித்ததுக்காக விஜயகாந்துக்கு தமிழ் நாட்டின் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.

மீண்டும் அடுத்த வாரம் மற்றுமொரு நெஞ்சில் நின்ற ராகத்துடன் சந்திக்கின்றேன்...!!

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

அற்புதமான புட் சிற்பங்கள்.. (ஆங்கிலப் பதிவு)

பொதுவாகவே நாம் பார்த்து வியக்கும் சிற்பங்களில் இதுவும் ஒன்று... அது தான் இந்த புல் சிற்பங்கள்... கண்ணைக்கவரும் வகையில் அமையப் பெற்றிருக்கின்றது. நீங்களும் பாருங்களேன்...

Here are 10 amazing sculptures made only of grass! Quite intricately sculpted, must see sculptures! Includes sculptures from elephants to giraffes to even unicorns!


Cool and creative Formula 1 car grass figure

Cow grass sculpture

This is an amazing elephant grass sculpture.

Giraffe grass sculpture found in Krasnoyarsk, Siberia during summer time.

In the grounds of a country house in Cornwall near the fishing village of Mevagissy the Victorian gardens have been restored to their former glory

Men grass sculpture at Museum Beelden aan Zee in Scheveningen by Wim Quist architects.

The sculpture, In the Garden of Dreams, was made by brother and sister team Sue and Pete Hill.This sculpture was created as a sister to the Mud Maid which can be found at the Lost Gardens of Heligan in Cornwall.

If you have ever visited an art gallery and felt assailed by the "don't touch" signs, then Lucy Strachan's work is for you. Her outdoor sculptures cry out to be touched - or even stroked and hugged, something the artist herself encourages. “Spinning Top” was Lucy's first grass work.

Unicorns United.

சனி, 13 ஆகஸ்ட், 2011

மினி சினிமா

வணக்கம் உறவுகளே....!! வாரா வாரம் மினி சினிமா பகுதியூடாக தமிழ் குறுந் திரைப்படங்களை பகிர்ந்து வருகின்றேன். அந்த வகையில் இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் தமிழ் குறுந் திரைப்படம் பசி.


பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது உண்மையே... என்று மீண்டும் இந்த திரைப்படம் நிரூபித்துள்ளது.
இத் திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன், யுத்த காலத்தின் நினைவுகளை நினைவு கூறுகின்றது. ஒரு பாடசாலை செல்லும் சிறுவனை மையமாக வைத்து இத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.


பசிக்கு உணவாக தண்ணீரை அருந்தி விட்டு பாடசாலை செல்கின்றான். பாடசாலையில் வைத்து பசி உயிரைப் பறிக்கின்றது. அருகில் வந்து அமர்ந்து, சாப்பாடு பெட்டியை திறந்து சோற்று பருக்கையில், கழன்ற ஒற்றையை ஒட்டுகின்றார் வாத்தியார். அந்த நேரத்தில் யுத்த விமானம் பறந்து வருகின்றது, எல்லோரும் அலறி அடித்துக் கொண்டு ஓடுகின்றனர். ஆங்காங்கே சிதறி அடித்து சென்று பங்கருக்குள் ஒழிந்து கொள்கின்றனர். ஆனால் ஒருசிறுவன் மட்டும் மீண்டும் ஓடி வருகின்றான். வந்தவன் போகாமல் என்ன செய்கின்றான்..???? எதற்க்காக வந்தான்..?? இதுதான் படத்தின் கதை....

ஆழமான கதைக்கருவுடன் அமைந்த அற்புதமான ஒரு சிறந்த குறுந் திரைப்படம். நீங்களும் தவறாது ஒருமுறை பாருங்கள்...

திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு, ஒளிப்பதிவு :- செ. தே இமய வர்மன்
கதை :- தாமரை செல்வி
படத்தொகுப்பு :- சரண்ராஜ்
சிறுவன் :- கிருஷ்ண ராஜ்

மீண்டும் அடுத்த வாரமும் மினி சினிமா பகுதியூடாக ஒரு சிறந்த தமிழ் குறுந் திரைப்படத்துடன் உங்களை சந்திக்கின்றேன்...!!

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

நெஞ்சில் நின்ற ராகம்

வணக்கம் உறவுகளே..!! வார வாரம் மனதை விட்டு நீங்காத இனிய இடைக்காலப் பாடல்களை "நெஞ்சில் நின்ற ராகம்" பகுதியூடாக உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி...!

இந்த வாரமும் உங்களுக்காக இனிய இடைக்காலப் பாடல் ஒன்று காத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் பாடல்... "அந்தி நேர தென்றல் காற்று..."


"இணைந்த கைகள்" திரைப்படத்துக்காக இடம்பெற்றது.


பாடல் வரி....

"அந்தி நேர தென்றல் காற்று...
அள்ளி தந்த தாலாட்டு ...
அந்தி நேர தென்றல் காற்று...
அள்ளி தந்த தாலாட்டு...

தங்கமகன் வரவைக் கேட்டு..
தந்தை உள்ளம் பாடும் பாட்டு..
தங்கமகன் வரவைக் கேட்டு..
தந்தை உள்ளம் பாடும் பாட்டு..

அந்தி நேர தென்றல் காற்று...
அள்ளி தந்த தாலாட்டு...
அந்தி நேர தென்றல் காற்று..
அள்ளி தந்த தாலாட்டு...

உயிர் கொடுத்த தந்தை இங்கே..
உரு கொடுத்த அன்னை அங்கே..
இன்பதுன்பம் எது வந்தாலும்..
பங்கு கொள்ளும் சொந்தம் எங்கே..
தாலாட்ட அன்னை உண்டு...
சீராட்ட தந்தை உண்டு..
இன்பதுன்பம் எது வந்தாலும்..
பங்கு கொள்ள நண்பன் உண்டு..
ஒரு தாயின் பிள்ளை போல..
உருவான சொந்தம் கொண்டு..
வரும் காலம் யாவும் வெல்ல..
இணைந்த கைகள் என்றும் உண்டு...

அந்தி நேர தென்றல் காற்று..
அள்ளி தந்த தாலாட்டு..
அந்தி நேர தென்றல் காற்று..
அள்ளி தந்த தாலாட்டு...

ஆராரோ ஆரிராரிராரோ...
ஆராரோ ஆரிராரிராரோ...

உன் மகனை தோளில் கொண்டு..
உரிமையோடு பாடுவதென்று..
அந்நாளில் துணையாய் நின்று..
பங்குக் கொள்ள நானும் உண்டு..
தத்துப் பிள்ளை இவனை கண்டேன்..
தாய்மை நெஞ்சம் நானும் கொண்டேன்..
பத்து திங்கள் முடிந்த பின்னே..
முத்து பிள்ளை அவனை காண்பேன்..
உறங்காத கண்ணில் இன்று..
ஒளி வந்து சேரக் கண்டேன்..
பரிவான நண்பன் தந்த..
கனிவான தோள்கள் கண்டேன்..

அந்தி நேர தென்றல் காற்று...
அள்ளி தந்த தாலாட்டு...
அந்தி நேர தென்றல் காற்று...
அள்ளி தந்த தாலாட்டு...
தங்கமகன் வரவைக் கேட்டு..
தந்தை உள்ளம் பாடும் பாட்டு..
தங்கமகன் வரவைக் கேட்டு..
தந்தை உள்ளம் பாடும் பாட்டு..

அந்தி நேர தென்றல் காற்று..
அள்ளி தந்த தாலாட்டு..
அந்தி நேர தென்றல் காற்று..
அள்ளி தந்த தாலாட்டு...!!"


அழகான மனதை வருடும் கேட்கக் கேட்க தெவிட்டாத பாடல்களில் இதுவும் ஒன்று.

1990 ஆம் ஆண்டு,ஆபாவாணனின் வரிகளில், N.K விஸ்வநாதனின் இயக்கத்தில், அருண் பாண்டியன், ராம்கி, நிரோஷா, சசிகலா, செந்தில் மற்றும் பலர் இணைந்து நடித்த திரைப்படம்.இசையமைத்துள்ளார் மனோஜ் கயான்..?? இளையராஜா என்றும் ஒரு தகவல் கூறுகின்றது.

மீண்டும் அடுத்த வாரம் மற்றுமொரு நெஞ்சில் நின்ற ராகத்தில் சந்திக்கின்றேன்...! வாசிக்க வந்த அணைத்து அன்பான உள்ளங்களுக்கும் நன்றிகள்....!!

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி...

வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி... எண்டதுமே பலருக்கு தேவாவின் பாடல் நினைவுக்கு வந்திருக்கும்.. நான் அதைப்பற்றி சொல்ல வர வில்லை. மாறாக கண்ணுக்கு இடும் லென்ஸ் வகைகளையே உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகின்றேன். சோ... சோப்பும் இல்ல சீப்பும் இல்ல... ஒன்லி கண்ணாடி.... ஓகே..


Mickey Mouse contact lens.

The Dior Eyes - designer branding!

Sports Lenses to reduce glare from the sun.

Cat Eye.

Extra Sparkle!








எப்பூடி இருக்கு..?? இப்பொழுது அதிகமாக இளைஞர்கள் யுவதிகள் எல்லோரும் இந்த கண்+ணாடி லென்ஸ் பாவிக்கும் மோகத்தில் இறங்கிவிட்டார்கள். ஆகவே அவர்களுக்கு இந்த பதிவு மூலம் புதிய லென்ஸ் வகைகளை அறிந்து கொள்ளக்கூடியாக இருந்திருக்கும் என நம்புகின்றேன்..

சனி, 6 ஆகஸ்ட், 2011

மினிசினிமா

வணக்கம் உறவுகளே..!! வாரா வாரம் மினிசினிமா பகுதியூடாக சிறந்த தமிழ் குறுந் திரைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து வருகின்றேன். அந்த வகையில் இந்த வாரமும் உங்களுடன் ஒரு அழகான கதையம்சம் கொண்ட குறுந் திரைப்படம் பற்றி பகிர்ந்து கொள்ளப் போகின்றேன்.


இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் தமிழ் குறுந் திரைப்படம் ஈசல்.


பொதுவாகவே ஈசலுக்கு ஆயுள் குறைவு எனலாம். காரணம் அது மின்குமிழை அல்லது ஒளியை சுத்தி சுத்தி திரிந்து இறுதியில் அந்த ஒளியிலே அல்லது வெப்பத்திலே தன் உயிரையும் விட்டுவிடும். அவ்வாறே இந்த ஈசல் திரைப்படமும்....

ஈசலும் காதலும் ஒன்று எனலாம். காரணம் இந்த காதல் சிலவேளைகளில் உயிரைக் கொடுக்கும் சிலநேரங்களில் உயிரை எடுக்கும். காதல் என்றால் அன்பு. இந்த அன்பிலே சந்தேகம் வந்தால் எப்படி இருக்கும்..??? சந்தேகம் எப்போதும் தன்னை மட்டும் இல்லாமல் சுத்தி இருக்கின்றவர்களையும் அழித்துவிடும். இந்த ஈசல் கதையும் அவ்வாறே....!

இரு காதலர்கள்... வழக்கம் போல் பெண்ணுக்கு தன் காதலன் மீது சந்தேகம் எப்போதும்.. ஒரு கட்டத்தில் அப்பெண் தொலைபேசி அழைப்பெடுக்கும் போது அவன் வேறொரு அழைப்பில் இருந்திருக்கின்றான். இந்த சம்பவம் பெரிதாக வெடிக்கின்றது. அவளிடம் எவ்வளவு எடுத்துக் கூறினாலும் செவிமடுப்பதாய் இல்லை. இறுதியில் கோபத்தோடும், மன உளைச்சலோடும், வெறுப்போடும் பைக்கில் ஏறி வருகின்றான். அதன் பின்பு நடப்பது என்ன....??? இது தான் படத்தின் உச்சக்கட்ட காட்சி.... அவன் மட்டும் இல்லாது அவனால் சுத்தி இருக்கின்றவர்களும் பாதிக்கப் படுகின்றார்கள். அழகாகவும் ஆழமாகவும் எடுத்துக் காட்டப் படுகின்றது.

ஒரு காதலால் இல்லை ஒரு சந்தேகத்தால் இரு காதலும் இரு உயிரும் எவ்வாறு சிதைவடைகிறதென்பதை எல்லோருக்கும் தெட்டத் தெளிவாக எடுத்து சொல்லுகின்றது. ஒவ்வொரு காதலனும், விசேடமாக காதலிகளும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

பெண்கள் தாங்கள் என்ன செய்கின்றோம்..?? எப்படி செய்கின்றோம்.??? அதன் பின் விளைவு என்ன..?? தாங்கள் செய்வதில் ஏதேனும் அர்த்தம் இருக்கா என்று எப்பொழுதும் யோசிக்க பழகிக் கொள்ள வேண்டும். அவர்களின் ஒரு சிறிய தவறால் அவர்கள் மட்டுமில்லாமல் இன்னும் எத்தனை பெற பாதிக்கப்படுகின்றார்கள்..?? இந்த திரைப்படம் எல்லா காதலர்களுக்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு...!!
சொல்லவேண்டிய விடயத்தை மிகவும் அழகாக, சிறந்த உதாரணம் மூலம் மனதில் பதியும் வண்ணம் சொல்லி இருக்கின்றார்கள்.


எழுத்து மற்றும் இயக்கம்: அருண்ராஜா காமராஜ்
நடிகர்கள்: ரகெண்டு மௌலி, அசோக்குமார், சுபாஷினி
ஒளிப்பதிவு: வசந்த்
எடிட்டிங்: ராஜேஷ்
உதவி இயக்குனர்: பிரவீன் & பி.முரளிதரன்
இணை இயக்குனர்: மணிகண்ணன்
இசை: சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பு: பி முரளிதரன்

மொத்தத்தில் ஈசல் ஊசலாடும் இரு உயிர்

மீண்டும் அடுத்த வாரம் மற்றுமொரு குறுந் திரைப்படத்துடன் மினி சினிமாவில் சந்திக்கின்றேன்..!!

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

நெஞ்சில் நின்ற ராகம்

வணக்கம் உறவுகளே....!! கடந்த சில நாட்களாக கொஞ்சம் வேலைப் பளு காரணமாக அதிகமான பதிவுகள் இட முடியவில்லை... இருந்தும் வாரா வாரம் இட்டு வருகின்ற நெஞ்சில் நின்ற ராகம், மினி சினிமா ஆகிய பகுதிகள் கட்டாயம் பதிவிடுவேன். அண்மைக்காலமாக அதிகமான சக பதிவர்கள், இன்னும் பலர் எனது வலைப் பதிவை வாசகர் வருகை தருகின்றீர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள். தொடர்ந்து வருகை தருவதோடு உங்களின் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். அவை இன்னும் எனது எழுத்தாற்றலை வளப்படுத்தும் என நம்புக்கின்றேன்...!!

சரி விஷயத்துக்கு வருவோம். வாரா வாரம் நெஞ்சில் நின்ற ராகம் என்ற பகுதியூடாக இனிய இடைக்காலப் பாடல்களை பகிர்ந்து வருகின்றேன். அந்தவகையில் இந்த வாரம் பகிர்ந்து கொள்ளும் பாடல் "வாடாத ரோசாப்பூ..."


வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பாத்தேன்...
பாடாத சோகத்தோடு பாட்டும் பாட கேட்டேன்..

வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பாத்தேன்...
பாடாத சோகத்தோடு பாட்டும் பாட கேட்டேன்....
வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பாத்தேன்....

காத்தாடி போலாடும் பெண்ணோட சிறு நெஞ்சு...
கையோடு சேத்தாச்சு ஏதோ ஒன்னு ஆச்சு..
காத்தாடி போலாடும் பெண்ணோட சிறு நெஞ்சு...
முடிவேதும் தெரியாம மோகம் தப்பி போச்சு.. அம்மாடி...
அம்மாடி ஊரெல்லாம் போலி வேஷம்....
ஆனாலும் பரிதாபம் ஏதோ பாவம்...

வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பாத்தேன்...
பாடாத சோகத்தோடு பாட்டும் பாட கேட்டேன்..

காத்தோட போயாச்சு என்னோட பாரம்...
ஆத்தோட போயாச்சு ஏன் கால நேரம்...
காத்தோட போயாச்சு என்னோட பாரம்...
காவேரி நீர் மேலே கண்ணீர் போட்ட கோலம் அம்மாடி...
அம்மாடி கூத்தாடி ஆடும் ஆட்டம் எல்லாமே தப்பாச்சு ஏதோ நேரம்....

வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பாத்தேன்...
பாடாத சோகத்தோடு பாட்டும் பாட கேட்டேன்...
வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பாத்தேன்...


அழகான சோகப் பாடல்.... 1980 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 19 ஆந் திகதி வெளியான "கிராமத்து அத்தியாயம்" திரைப் படத்துக்காக இடம் பெற்ற பாடல். C.ருத்ரையாவின் இயக்கத்தில், இசைஞானி இளையராஜாவின் தெவிட்டாத, மனதை வருடும் மெல்லிசையில், S.P பாலசுப்ரமணியம் பாடிய இனிய காதல் சோகப் பாடல்.
இந்த திரைப்படத்தில் சந்திரஹாசன், நந்த குமார், ஸ்வர்ணலதா ஆகியோர் நடித்திருக்கின்றார்கள். இந்த ஸ்வர்ணலதா யார் என்று தெரியுமா..?? கடந்த வருடம் எம்மை விட்டு பிரிந்து சென்ற பின்னணிப் பாடகி ஸ்வர்ணலதாவே தான்.

மீண்டும் அடுத்த வாரமும் இன்னுமொரு இனிய இடைக்காலப் பாடலுடன் நெஞ்சில் நின்ற ராகத்தில் சந்திக்கின்றேன். வாசிக்க வந்த அணைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்....!!