சனி, 13 ஆகஸ்ட், 2011

மினி சினிமா

வணக்கம் உறவுகளே....!! வாரா வாரம் மினி சினிமா பகுதியூடாக தமிழ் குறுந் திரைப்படங்களை பகிர்ந்து வருகின்றேன். அந்த வகையில் இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் தமிழ் குறுந் திரைப்படம் பசி.


பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது உண்மையே... என்று மீண்டும் இந்த திரைப்படம் நிரூபித்துள்ளது.
இத் திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன், யுத்த காலத்தின் நினைவுகளை நினைவு கூறுகின்றது. ஒரு பாடசாலை செல்லும் சிறுவனை மையமாக வைத்து இத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.


பசிக்கு உணவாக தண்ணீரை அருந்தி விட்டு பாடசாலை செல்கின்றான். பாடசாலையில் வைத்து பசி உயிரைப் பறிக்கின்றது. அருகில் வந்து அமர்ந்து, சாப்பாடு பெட்டியை திறந்து சோற்று பருக்கையில், கழன்ற ஒற்றையை ஒட்டுகின்றார் வாத்தியார். அந்த நேரத்தில் யுத்த விமானம் பறந்து வருகின்றது, எல்லோரும் அலறி அடித்துக் கொண்டு ஓடுகின்றனர். ஆங்காங்கே சிதறி அடித்து சென்று பங்கருக்குள் ஒழிந்து கொள்கின்றனர். ஆனால் ஒருசிறுவன் மட்டும் மீண்டும் ஓடி வருகின்றான். வந்தவன் போகாமல் என்ன செய்கின்றான்..???? எதற்க்காக வந்தான்..?? இதுதான் படத்தின் கதை....

ஆழமான கதைக்கருவுடன் அமைந்த அற்புதமான ஒரு சிறந்த குறுந் திரைப்படம். நீங்களும் தவறாது ஒருமுறை பாருங்கள்...

திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு, ஒளிப்பதிவு :- செ. தே இமய வர்மன்
கதை :- தாமரை செல்வி
படத்தொகுப்பு :- சரண்ராஜ்
சிறுவன் :- கிருஷ்ண ராஜ்

மீண்டும் அடுத்த வாரமும் மினி சினிமா பகுதியூடாக ஒரு சிறந்த தமிழ் குறுந் திரைப்படத்துடன் உங்களை சந்திக்கின்றேன்...!!

2 கருத்துகள்:

கவி அழகன் சொன்னது…

good

Unknown சொன்னது…

//கவி அழகன் சொன்னது…
good//

thanks......

கருத்துரையிடுக