வெள்ளி, 16 செப்டம்பர், 2011

நெஞ்சில் நின்ற ராகம்

வணக்கம் உறவுகளே...!! வாரா வாரம் நெஞ்சில் நின்ற ராகம் பகுதியூடாக மனது மறக்காத இனிய இடைக்கால பாடல்களை உங்களுடன் பகிர்ந்து வருகின்றேன். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு இனிய சூப்பர் ஹிட்டான இடைக்கால பாடலுடன் சந்திக்க காத்திருக்கின்றேன். இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் பாடல்.. காதல் காயங்களே....!


பாடல் வரி...!

"காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே...
சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே...
பெண்கள் உள்ளங்கள் நிலைமாறி கிளைமாறுமே...
ஆண்கள் உள்ளம் கண்ணீரோடு அலைபாயுமே...
காதல் பொய்யானது வாழ்க்கை மெய்யானது...
ஆனது ஆகட்டும் கோப்பை ஏந்துங்களே..

காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே...
சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே...

வானம் அது ஒன்று தான் வானில் நிலவொன்று தான்..
காதல் கலைந்தாலும் மனதில் என் நினைவொன்று தான்..
வானம் அது ஒன்று தான் வானில் நிலவொன்று தான்..
காதல் கலைந்தாலும் மனதில் என் நினைவொன்று தான்..

தாளம் இல்லாமலே பாடல் நான் சொல்கிறேன்...
தெய்வம் இல்லாமலே பூஜை நான் செய்கிறேன்...
உண்மை காதல் என்றும் கட்சி மாறி போகாதடா...
காதலின் வேதனை என்றும் தீராதடா....

காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே...
சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே...

பெண்மை பொல்லாதது நேர்மை இல்லாதது...
உண்மை தெரியாத மனித உன் மனம் ஏங்குது...
பெண்மை பொல்லாதது நேர்மை இல்லாதது...
உண்மை தெரியாத மனித உன் மனம் ஏங்குது...

உண்மை காதல் என்று இங்கு ஒன்றும் இல்லை..
நீயும் காதல் கொள்ள வேறு பெண்ணா இல்லை..
நீயும் வாழும் பொது வாழ வேண்டும் வழியா இல்லை...
இன்னும் நீ ஊதடா பாட்டில் ஸ்ருதியே இல்லை...
இன்னும் நீ ஊதடா பாட்டில் ஸ்ருதியே இல்லை...

காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே...
சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே...
பெண்கள் உள்ளங்கள் நிலைமாறி கிளைமாறுமே...
ஆண்கள் உள்ளம் கண்ணீரோடு அலைபாயுமே...
காதல் பொய்யானது வாழ்க்கை மெய்யானது...
ஆனது ஆகட்டும் கோப்பை ஏந்துங்களே...

காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே...
சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே...!!"


திரைப்படம் : ஆண்களை நம்பாதே
பாடல் : காதல் காயங்களே
பாடகர் : K.J. யேசுதாஸ்
இசை : தேவேந்திரன்
வருடம் :1987


அழகான வரிகளைக்கொண்டமைந்த, காதல் சோகப் பாடல்.. பல தத்துவங்களை பாடல் வரிகள் சொல்கின்றது. என்று கேட்டாலும் மனதை விட்டு அகலாத பாடல்களில் இதுவும் ஒன்று. பல ஆண்களின் தேசிய கீதமாகவும் இப்பாடல், இன்றும் ஓங்கி ஒலிக்கின்றது எனலாம். இந்த திரைப்படத்தில் (மறைந்த நடிகர்) பாண்டியன், ரேகா, செந்தில் மற்றும் பலர் நடித்துள்ளனர். அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்..!!

மீண்டும் அடுத்தவாரமும் மற்றுமொரு இனிய நெஞ்சில் நின்ற ராகத்துடன் சந்திக்கின்றேன்...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக