வணக்கம் உறவுகளே..!! வாரா வாரம் நெஞ்சில் நின்ற ராகம் பகுதியூடாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி..! இந்த வாரமும் மனது மறக்காத இனிய இடைக்காலப் பாடலொன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகின்றேன். இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் நெஞ்சில் நின்ற ராகம்.. "ஒருகூட்டுக் கிளியாக..."
பாடல் வரி...
"ஒரு கூட்டுக் கிளியாக..
ஒரு தோப்புக் குயிலாக பாடு பண்பாடு
இரை தேட பறந்தாலும்
திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு
ஒரு கூட்டுக் கிளியாக..
ஒரு தோப்புக் குயிலாக பாடு பண்பாடு
இரை தேட பறந்தாலும்
திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு
செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் ஈதி பாராமல் வெள்ளம் வரலாம்.
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்,
நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்
சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால்
சத்தியம் உங்களை காத்திருக்கும்
தாய் தந்த அன்புக்கும் நான் தந்த பண்புக்கும்
பூமாலை காத்திருக்கும்
ஒரு கூட்டுக் கிளியாக..
ஒரு தோப்புக் குயிலாக பாடு பண்பாடு
இரை தேட பறந்தாலும்
திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு
நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா??
வேர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமா..??
வெள்ளை இளஞ்சிட்டுக்கள் வெற்றிக் கோடி கட்டுங்கள்.
சொர்க்கம் அதை தட்டுங்கள் விண்ணை தொடுங்கள்.
பேருக்கு வாழ்வது வாழ்க்கை இல்லை
ஊருக்கு வாழ்வதில் தோல்வி இல்லை
ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் நான் செய்தேன்
என் கண்ணில் ஈரமில்லை.
ஒரு கூட்டுக் கிளியாக..
ஒரு தோப்புக் குயிலாக பாடு பண்பாடு
இரை தேட பறந்தாலும்
திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு..."
1985 ஆம் ஆண்டு, ராஜசேகரனின் இயக்கத்தில் வெளிவந்த, படிக்காதவன் திரைப்படத்துக்காக, இசைஞானி இளையராஜாவின் இசையில், வைரமுத்துவின் வைர வரிகளில், மறைந்த பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்....
மனதை வருடும் இசைஞானியின் இசையும், வைரமுத்துவின் கவி வரிகளும், மலேசியா வாசுதேவனின் குரலும் பாடலுக்கு பெரும் பலம் சேர்த்துள்ளது எனலாம். ரஜினிகாந்த், அம்பிகா, சிவாஜிகணேசன் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம். நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பு கூட இப்பாடலுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது என்றால் அது மிகையில்லை.
மீண்டும் அடுத்தவாரம் மற்றுமொரு நெஞ்சில் நின்ற ராகத்துடன் சந்திக்கின்றேன்...!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக