தமிழ்த் திரையுலகில் நெஞ்சை விட்டு அகலாத நடிகர்கள் ஒரு சிலரே... அப்படிப்பட்ட நடிகர்களில் ஒருவர் தான் முரளி. இப்படியான ஒரு சிறந்த நடிகருக்கு அவர் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் ஒரு பதிவு கட்டாயம் போடவேண்டும் என்பது என்று நீண்ட நாட்களாக நினைத்த வண்ணம் இருந்தேன். ஆயினும் வேலைப்பளு காரணமாக கடந்த 8 ஆந் திகதி பதிவிட எண்ணியிருந்த பதிவை இன்று பதிவிடுகின்றேன்.. நேரம் தாழ்த்தி பதிவிடுவதுக்கு மன்னிக்கவும்.
தனது எளிமையான, இயல்பான நடிப்பினால் எல்லோர் மனங்களிலும் இடம்பிடித்தவர் என்று சொன்னால் அது மிகை ஆகாது. காரணம் அவரை இந்தக்காலத்து இளசுகளுக்கும் பிடிக்கக் கூடிய ஒரு தமிழ் நடிகர் என்று மார் தட்டிக் கொள்ளலாம். அப்படிப்பட்ட ஒரு மிகச்சிறந்த நடிகரை இந்த தமிழ் திரை உலகம் இன்று இழந்து ஓராண்டுகள் பூர்த்தியாகிவிட்டது.
கடந்த வருடம் (2010) இதே செப்டம்பர் மாதம் 8 ஆந் திகதி மாரடைப்பால் இறைபதம் அடைந்தார். இந்த ஓராண்டுகள் எவ்வாறு சென்றதே என்று தெரியவில்லை... ஆனாலும் அவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களையோ, அல்லது பாடல்களையோ எப்பொழுது பார்த்தாலும் அவர் மறைந்த செய்தி கண்முன்னே வந்து நிக்கின்றது. இனிமேல் இவர் நடிக்கப்போவதில்லையே என்று..!!
1984 ம் ஆண்டு பூவிலங்கு படத்தில் ஆரம்பித்து 2010 - கவசம் திரைப்படம் வரை ஏறக்குறைய 100 திரைப்படங்களில் நடித்துள்ளார். பகல் நிலவு, இதயம், புது வசந்தம், பொற்காலம், காலமெல்லாம் காதல் வாழ்க,வெற்றிக்கொடி கட்டு என்று பல சூப்பர் ஹிட் படங்களைத் தந்த முரளி என்றும் மார்க்கண்டேயன் என்பது மாதிரி இதயம் படத்தில் படத்தில் பார்த்தது போலவே இப்போதும் இளமையாக இருந்து வந்தார்.
கடல் பூக்கள், தேசிய கீதம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து தன் நடிப்பை மட்டுமல்லாது, அந்த கதாப்பாத்திரங்களுக்கு உயிரோட்டமும் வழங்கியதோடு ரசிகர் உள்ளங்களிலும் நீங்காத ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டார். 30 வருட காலத்தில் அவர் தமிழ் சினிமாவுக்கு தன்னால் இயன்ற பங்களிப்பை வழங்கியுள்ளார்.
கடல் பூக்கள், தேசிய கீதம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து தன் நடிப்பை மட்டுமல்லாது, அந்த கதாப்பாத்திரங்களுக்கு உயிரோட்டமும் வழங்கியதோடு ரசிகர் உள்ளங்களிலும் நீங்காத ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டார். 30 வருட காலத்தில் அவர் தமிழ் சினிமாவுக்கு தன்னால் இயன்ற பங்களிப்பை வழங்கியுள்ளார்.
அவரின் நடிப்பை வெளிச்சம் போட்டுக்காட்டிய படங்களில் கனவே கலையாதே, மனுநீதி, ரத்னா, காமராசு போன்றவற்றைக் குறிப்படலாம். மேலும் ஆனந்தம், சமுத்திரம், கடல் பூக்கள், காதலுடன், காதலே நிம்மதி போன்றவையும் குறிப்பிட்டுக் கூற முடியும். இவ்வாறன எளிமையான, ஆக்க்ஷன், நகைச்சுவை, சென்டிமென்டான, ரசிகர் நெஞ்சில் நிலைத்து நிற்கக்கூடிய பாத்திரங்களில் நடித்து அசத்தியவர். அன்றைய அதே இளமையான தோற்றத்துடன் இன்றுவரை வாழ்ந்தவர்.
அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்பட பட்டியல் வருமாறு...
- பூவிலங்கு
- பகல் நிலவு (மணிரத்னம் இயக்கம்)
- தங்கமணி ரங்கமணி
- பொற்காலம் (சேரன் இயக்கம்)
- புது வசந்தம் (விக்ரமன் இயக்கம்)
- பாலம்
- வெற்றி மலை
- புதியவன்
- சிலம்பு
- நானும் இந்த ஊருதான்
- நாங்கள் புதியவர்கள்
- சிறையில் சில ராகங்கள்
- புதிய காற்று
- நம்ம ஊரு பூவாத்தா
- சாமி போட்ட முடிச்சு
- இதயம்
- குறும்புக்காரன்
- தங்க மனசுக்காரன்
- சின்ன பசங்க நாங்க
- தங்கராசு
- என்றும் அன்புடன்
- தாலி கட்டிய ராசா
- மணிக்குயில்
- தங்க கிளி
- மஞ்சு விரட்டு
- அதர்மம்
- என் ஆசை மச்சான்
- சத்யவான்
- ஆகாய பூக்கள்
- தொண்டன்
- பொம்மை
- காலமெல்லாம் காதல் வாழ்க
- போர்க்களம்
- ரோஜா மலரே
- காதலே நிம்மதி
- தினந்தோறும்
- வீர தாலாட்டு
- ரத்னா
- பூந்தோட்டம்
- என் ஆசை ராசாவே (சிவாஜியுடன் சேர்ந்து நடித்த ஒரே படம்)
- உன்னுடன்
- தேசிய கீதம் (சேரன் இயக்கம்.)
- பூவாசம்
- கனவே கலையாதே
- ஊட்டி
- இரணியன்
- வெற்றி கொடி கட்டு (சேரன் இயக்கம்.)
- மனு நீதி (சுமார்)
- கண்ணுக்கு கண்ணாக
- சொன்னால்தான் காதலா
- ஆனந்தம் (லிங்குசாமி இயக்கம்)
- சமுத்திரம்
- அள்ளித் தந்த வானம்
- கடல் பூக்கள் (மாநில அளவில் சிறந்த நடிகர் விருது கிடைத்தது. பாரதிராஜா இயக்கம்.)
- சுந்தரா டிராவல்ஸ்
- காமராசு
- நம்ம வீட்டு கல்யாணம்
- காதலுடன்
- அறிவுமணி
- பேசா கிளிகள்
- எங்க ராசி நல்ல ராசி
- நீ உன்னை அறிந்தால்
- பாணா காத்தாடி (கடைசி படம், இதிலும் மாணவன்தான்; மகன் அதர்வா ஹீரோ)
- வண்ணக் கனவுகள் (1987)
- கீதாஞ்சலி (1985)
- பூமணி
முரளி நடித்து நான் பார்த்த திரைப்படங்களில் மனதை தொட்டுச் சென்ற திரைப்படப் பாடல்கள் சில வருமாறு....
கனவே கலையாதே திரைப்படப் பாடல்...
பூசு மஞ்சள்.. ஹரிஹரனின் குரலில்...
கனவே கலையாதே திரைப்படப் பாடல்...
கண்ணோடு கண்ணோடு வந்த காதல்...
காதலே நிம்மதி திரைப்பட பாடல்...
வித விதமா சோப்பு சீப்பு...
மனுநீதி திரைப்பட பாடல்..
ஒரு ரோஜாக்கூட்டம் பூத்து....
இதயம் திரைப்பட பாடல்...
இதயமே என் இதயமே....
பொற்காலம் திரைப்பட பாடல்...
தஞ்சாவூர் மண்ணெடுத்து...
வெற்றிக்கொடிக்கட்டு திரைப்பட பாடல்...
கறுப்பு தான் எனக்கு..
காமராசு திரைப்பட பாடல்...
ஆலயங்கள் தேவை இல்லை....
காமராசு திரைப்பட பாடல்...
பாதி நிலா இன்று பௌர்ணமி...
இறுதியாக அவர் தன் மகன் அதர்வா கதாநாயகனாக நடித்த பானா காத்தாடி படத்தில் கௌரவ வேடத்தில் வந்து சென்றார். பார்க்கலாம் அதர்வா தன் தந்தையின் இடத்தை நிரப்புகின்றாரா என்று... !!
இந்த ஓராண்டு மட்டுமல்ல இன்னும் ஓராயிரம் ஆண்டுகள் கடந்து சென்றாலும் முரளியின் நடிப்பும் அவர் நினைவுகளும் தமிழ் திரையுலக ரசிகர் நெஞ்சங்களில் நீங்காது நிலைத்து நிக்கும்..



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக