வணக்கம் உறவுகளே வாரா வாரம் உங்களை மினி சினிமா பகுதியூடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. அந்த வகையில் இந்த வாரமும் ஒரு அழகான தமிழ் குறுந் திரைப்படத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்...!
இந்த வாரம் உங்களுடன் மினி சினிமா பகுதியூடாக பகிர்ந்து கொள்ளும் தமிழ் குறுந் திரைப்படம் "தேய் மச்சி தேய்"
எல்லோரும் ஆசைப்படுவது நானும் பணக்காரன் ஆகணும், அவனை போல கை நிறைய காச வீசி வீசி செலவழிக்கனும், எல்லோர் முன்னிலையில் என்னையும் மதிக்கனும், அங்க, இங்க எல்லா இடமும் போகணும் எண்டு கனவு காணுவாங்க...
இருந்தாலும் அவங்க எடுக்கிற சம்பளமோ காணாது. இதே போல தான் இந்த திரைப்படத்தின் ஹீரோ கூட, அளவுக்கு மிஞ்சி ஆசைப் படுகின்றார். எனக்கும் நிறைய காசு வேணும் என்று கோயிலுக்கு சென்று இறைவனிடம் வேண்டுகின்றார். இதை பார்த்துக்கொண்டிருந்த ஒரு ஏமாற்றுப் பேர்வழி, அவனிடம் வந்து, ஆசை வார்த்தைகளைக் கூறுகின்றார்.
அதில் மயங்கிய நமது ஹீரோ தனது வரவுக்கு மிஞ்சிய அளவில் கடனட்டை மூலம் செலவு செய்கின்றார். மாத இறுதியில் செலவுக்கான பற்றுச் சீட்டு வருகின்றது. அப்போது தான் தன் நிலை உணர்கின்றார். அதன்பின் நடப்பது என்ன..??? பலருக்கு நல்ல பாடம் புகட்டும் ஒரு படம்...
கடனட்டை மூலம் வரப்போகின்ற பின் விளைவும், ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாமல் இருப்பதுக்கும், எம்மை நாமே கட்டுப்படுத்தவும் மிகச் சிறந்த உதாரணம் இந்த குறுந்திரைப்படம்.
இந்த குறுந் திரைப்படத்தை பார்த்த பின் பலருக்கும் தங்கள் நினைவுகள் கண் முன்வரக்கூடும். காரணம் நீங்களும் பாதிக்கப்பட்ட ஒருவராக இருக்கலாம்.
எழுத்து மற்றும் இயக்கம் : N.ராஜேஷ்குமார்
நடிகர்கள் : கர்ணா, ஜிதேந்தர், N.சதீஷ், சில்பி, ப்றேப்னா
இணை இயக்குனர் : S.குரு
உதவி ஒளிப்பதிவு : GK விஷ்ணு
ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்: N.S.ராஜேஷ்குமார்
நடிகர்கள் : கர்ணா, ஜிதேந்தர், N.சதீஷ், சில்பி, ப்றேப்னா
இணை இயக்குனர் : S.குரு
உதவி ஒளிப்பதிவு : GK விஷ்ணு
ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்: N.S.ராஜேஷ்குமார்
மொத்தத்தில் "தேய் மச்சி தேய்" அளவுடன் தேய்....
மீண்டும் அடுத்த வாரம் மினி சினிமா பகுதியூடாக மற்றுமொரு தமிழ் குறுந் திரைப்படத்துடன் சந்திக்கின்றேன்..!! வாசிக்க வந்த அணைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி...!!




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக