சனி, 30 ஜூலை, 2011

ஆடிவேல் விழாவும் ஆட்டிப்படைத்த ஆடிக்கலவரமும்

ஆடிவேல் ரதபவனி ஆரம்பித்த வரலாறு

இலங்கை எங்கும் வேலுக்கு அரோஹரா எனப் பண்டுதொட்டு கோஷமிட்டு வழிபடுவது குறிப்பாக ஆடி மாதத்திலேயேயாகும். அரோஹராச் சத்தம் வானைப் பிளக்குமளவுக்கு கோஷமிடப்படுவது பக்திமிகு வேல் வழிப்பாட்டினால் ஆகும். இதற்கான காரணம் ஆடிப் பூரணையோடு வருவது கதிர்காம உற்சவம்.

கதிர்காம உற்சவம் நிகழும் காலத்தில் இலங்கையின் நான்கு திசைகளில் வாழும் வேலவனின் அடியார்கள் விரத அனுட்டானத்துடன் கால் நடையாகவே தமது திருத்தல யாத்திரையை மேற்கொண்டனர். பின்னர் புகையிரதம், பேரூந்து, வான் முதலானவற்றில் பிரயாணஞ் செய்து கதிர்காமத்தை அடைந்து வழிப்பட்டனர். அவ்வாறு திருத்தல யாத்திரையின் போது அவர்களால் முருகனை மனதார வாழ்த்தி எழுப்பும் கோஷமே "அரோஹரா" இக் கோஷமானது யாத்திரை மேற்கொள்ளும் சகல கதிர்காமக் கந்தன் அடியார்களாலும் எழுப்பப்படும் 'அரோஹரா' கோஷம் ஆகும்.

வேல் உண்டு. வினை இல்லை என நாம் வேலனை வழிபடுகின்றோம். கதிர்காம வேல், தில்லை மண்டூர் வேல், திருகோணமலை வேல், செல்வச்சந்நிதி வேல், மாவிட்டபுரம் வேல், மலையகத்துவேல், கொழும்பு மாநகர் வேல் என வேலவன் எங்குமே வீற்றுள்ளான். வேல் தனிவேலாக உள்ளது.

அதேபோல ஆறு மூலைகளைக் கொண்ட வேலும் வழிபாட்டில் பண்டு தொட்டு இருந்து வருகின்றது. சிவபெருமானின் ஈசானம், தற்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்ற ஐந்து முகங்களையும் அதோ முகம் எனப்படும் முகத்தையும், கொண்டதே ஆறு முகங்களை- ஆறு மூலைகளைக் கொண்ட வேலாகும். கிராமம் முதல் தலைநகர் வரை இவ்வாறு வேல் வழிபாடு இருந்து வருகின்றது.

ஆடிமாதத்தில் கதிர்காமக் கந்தன் உற்சவத்தோடு வருவது ஆடிவேல் விழா. சம்மாங்கோட்டில் வர்த்தகத்துக்காக வந்த பெருமக்கள் தமது வழிபாட்டிற்காக வேலை வைத்து வணங்கினர். இவர்கள் கதிர்காம உற்சவத்தைத் தர்சிக்க பாத யாத்திரையாக காவடி முன்செல்ல வேலைத் தாங்கி அரோஹரா கோஷமிட்டுக் கதிர்காமஞ் சென்று மாணிக்க கங்கையில் நீராடி முருகப் பெருமானை வழிபட்டு வந்தனர்.


நாட்டுக்கோட்டை நகரத்தார் செட்டித் தெருவில் வேலை வைத்து கதிர் வேலாயுத சுவாமி ஆலயத்தை அமைத்து வழிபட்டுவந்தனர். இவர்கள் வருடா வருடம் வேலோடு சென்று கதிர்காம வேலவனை தர்சித்து வருவது வழக்கமாக இருந்தது.

பிரித்தானியர் ஆட்சியின் போது நாட்டில் ஏற்பட்ட 'கொலரா' நோயால் கதிர்காம யாத்திரை தடைப்பட்டது. இதன் காரணமாக சம்மாங்கோட்டினரால் முதலாம் குறுக்குத் தெருவில் வேல் வழிபாட்டு விழா ஆரம்பிக்கப்பட்டது. நாட்டுக் கோட்டை நகரத்தாரால் செட்டித்தெருவில் வேல் வழிபாட்டு விழா மேற்கொள்ளப்படலாயிற்று. இவ்வாலயங்களில் வேலவனுக்கு வழுவாது விழாக்கள் நடைபெற்றன.

எனவே கதிர்காம உற்சவ காலத்தில் கொழும்பு மாநகரில் வேல்விழா ஆரம்பமாயிற்று. முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள வேலவன் காவடி முன்செல்ல மங்கள வாத்தியம் முழங்க நகர் பவனியாக வெள்ளவத்தை சம்மாங்கோட்டார் ஸ்ரீமாணிக்க விநாயகர் ஆலயஞ் சென்று அங்கு தங்கி அருள் பாலித்து நான்காம் நாள் மீண்டும் சம்மாங்கோட்டார் ஆலயத்தை வேலவன் வீதியுலாவாக வந்து சேர்வது வழக்கமாகும்.

அதேபோன்று நாட்டுக் கோட்டை நகரத்தார் செட்டித் தேருவில் இருந்து வேலவனை மங்கள வாத்திய சகிதம் பம்பலப்பிட்டி கதிர் வேலாயுத சுவாமி ஆலயத்திற்கு வீதியுலாவாக - நகர் உலாவாக எடுத்துச் சென்று நான்காம் நாள் மீண்டும் நகர் வலமாக செட்டித்தெரு ஆலயத்துக்கு எளுந்தருளச் செய்தனர். 1902 முதல் வேல், வெள்ளி இரதத்தில் வருவது எண்டு குறிப்பிடுதல் சாலப் பொருந்தும்.

ஆடிக்கலவரம்


செட்டியார் தெரு புதிய கதிரேசன் ஆலயத்திலிருந்து பம்பலப்பிட்டி பழைய கதிரேசன் ஆலயத்திற்குச் சென்ற வெள்ளி ரதம் 1983 யூலை 24 ஆம் திகதி இரவு மீண்டும் ஆலயம் திரும்புவதற்காக கொள்ளுப்பிட்டி வரை வந்துகொண்டிருக்கிறது. வர வர உடன் வந்த பக்தர்கள் சிறிது சிறிதாகக் காணாமற் போகிறார்கள். பின்னர்தான் தகவல் கிடைத்தது.


பொரளை மயானத்தில் இராணுவ வீரர்களின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட சில குண்டர்கள் கலவரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று. உடனே வெள்ளி ரதத்தை மீண்டும் பம்பலப்பிட்டிக்கே கொண்டு சென்றோம். அன்றிரவு வானொன்றில் சுவாமிச் சிலையைக் கொண்டு சென்றோம். ஒரு வாரம் கழித்து ரதத்தைக் கொண்டு சென்றோம். பழையதை மீட்ட விரும்பாதவராக அனுபவத்தைச் சொல்கிறார் இராஜேந்திரன் செட்டியார் என்பவர்..


அதன் பின்பு கொழும்பு முழுவதும் கலவரம் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது. அதைபற்றிய தகவல்களை விரிவாக சொல்கின்றார் என் தாயார்...

"அன்று தானும் தனது நண்பியும் ஆடிவேல் பார்ப்பதுக்காக செல்லவேண்டுமென்று திட்டமிட்டனாறாம். மாலை மூன்று மணியளவிலே பம்பலப்பிட்டி கோவிலுக்கு தயாராகி விட்டு நண்பியின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தாராம். ஏழு மணியாகி விட்டது. நண்பி வரவில்லை. ஏமாற்றத்துடன் வீட்டிலே இருந்து விட்டார்.

மறுநாள் காலை, வழமை போல் வேலைக்கு சென்றிருக்கின்றார். அப்பொழுது நண்பியிடம் வராததுக்கான காரணத்தை விசாரித்த போது கூறினாராம் நேற்று ஆடிவேல் விழாவில் தமிழ், சிங்கள குழப்பமாம். அதுதான் வரவில்லை என்று. சொல்லி முடிப்பதுக்குள், மட்டக்குளியில் பணிபுரிந்த தொழிற்சாலையில் மேலிடத்தில் இருந்து விஷேட அறிவிப்பு.

கொழும்பில் இனக்கலவரம் ஏற்பட்டுள்ளதால் எல்லோரும் பாதுகாப்புடன் வீடுகளுக்கு சென்றடையவும் என்று. உடனடியாக அங்கிருந்த தமிழ், சிங்கள ஊழியர்கள் அனைவரும் தொழிற்சாலையை விட்டு வெளியேற தொடங்கியுள்ளார்கள். தமிழ் பெண்கள் தங்கள் நெத்தியில் இருந்த பொட்டை அழித்துக்கொண்டு வெளியேறினார்களாம். எனது தாயாரின் வீடு மட்டக்குளியிலே அமைந்திருந்தமையால் உடனடியாக வீட்டை நோக்கி விரைந்தாராம்.


அதன் பின் நேரம் செல்லச் செல்ல கொழும்பு கொழுந்து விட்டு எரியத் தொடங்கியதாம். அக்கம் பக்கம் இருந்த பல தமிழ் வீடுகள்,அடித்து நொறுக்கப்பட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியேற்றப் பட்டு அவர்களின் பொருட்கள் எல்லாம் களவாடப்பட்டதாம். வீடுகள் எரித்தும், பழைய முன் விரோதங்கள் எல்லாவற்றையும் தீர்க்கும் முகமாக அவர்களை அடித்தும், துன்புறுத்தியும், தூண்களில் நிறுத்தி கட்டி வைத்து எரித்திருக்கின்றார்கள்.


அந்த நேரத்திலே தனது அண்ணன் கலவரம் நிறைந்த முகத்துடன் வீட்டை நோக்கி விரைகின்றார். அவர் எதிபார்த்தது, தன்குடும்பமும் சின்ன பின்னமாகி இருக்குமே என்ற அச்சத்தில்.... ஆனால் அப்படியேதும் இடம் பெறவில்லை. வந்தவர் மேலும் சொல்கிறார்.


கொழும்பின் மத்திய பிரதேசமான புறக்கோட்டைப் பகுதிகளில் இளைஞர்கள் பலர் மின் கம்பங்களிலே தொங்கிய வண்ணம் எரிந்து கொண்டிருப்பதாகவும் இன்னும் கடைகள், வீடுகள் என எல்லாம் அழித்தொழிக்கப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் சொன்னார்.


இவ்வாறே பல உயிர்கள் ஆடிகலவரத்தின் போது பறிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து சில நாட்கள்,வாரங்களாக கொழும்பு நகர் கொழுந்து விட்டு எரிந்தது என தெரிவித்தார்.


இந்நிலையில் எனது தந்தை கூறும் போது வெள்ளவத்தை கூட அதே நிலைமை தான் இருந்தது எனவும் வெள்ளவத்தையில் இருக்கும் பிரபலமான எண்ணெய் கடை பல நாட்களாக எரிந்ததாகவும் சொன்னார்.


இவ்வாறு கறை படிந்த ஆடிவேல் விழா 1993,2002,2004 ஆகிய காலப்பகுதியில் சுமாராக இடம் பெற்றாலும் கடந்த வருடம் 2010 ஆம் ஆண்டு மீள் எழுச்சி பெற்றது எனலாம். 28 வருடங்களின் பின்னர் மீண்டும் பழைய நிலையில் மிக கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வருடத்திற்கான ஆடிவேல் விழா அடுத்த மாதத்தின் ஆரம்ப கிழமையில் நடை பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 29 ஜூலை, 2011

மினி சினிமா

வணக்கம் உறவுகளே.. வாரா வாரம் மினி சினிமா பகுதியூடாக உங்களுடன் தமிழ் குறுந் திரைப்படமொன்றை பகிர்ந்து கொள்ளுவது வழமை. அந்த வகையில் இவ்வாரமும் ஒரு சிறந்த குறுந் திரைப்படமொன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகின்றேன். இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் திரைப்படம் முகப்புத்தகம்.


இன்றைய காலத்தில் வேகமாக சுழலும் உலகில் அன்றாடக் கடமைகளில் ஒன்றாக முகப்புத்தகம் அல்லது பேஸ் புக் முக்கிய இடம் பிடித்துள்ளது. இந்த சமூக நட்புறவுத் தளங்கள் கடல் கடந்து இருக்கும் எமது சொந்தங்களையும், நண்பர்களையும் தேடிப்பிடிப்பதுக்கும், அப்படி கண்டுகொண்ட சொந்தங்களுடன் இலகுவாக பேசுவதுக்கும் கருத்துக்களையும், தகவல்களையும் பகிர்ந்து கொள்வதுக்கும் தான் உருவாக்கப்பட்டுள்ளது.


ஆனால் இன்று அதையும் தாண்டி, எங்கேயோ சென்று கொண்டிருக்கின்றனர். இளம் சமூகத்தினர் மாத்திரமின்றி வயதானோரும் இப்பொழுது இதில் தங்களை மறந்து வீணாக பொழுதுகளை போக்க ஆரம்பித்துள்ளனர். அரட்டை, விளையாட்டுக்கள் என்று ஒரு சாராரும், இன்னொரு தொகுதியினர் நண்பர்கள் என்று பழகி காதல், பிரிவு, பழிவாங்கல், என்று சென்று கொண்டிருக்கின்றது. பல இளம் சமூகத்தினர் காதல், ஏமாற்றம், மன உளைச்சல், இந்தன் காரணமாக தற்கொலை முயற்சி, இன்னும் என்னென்ன தவறான செயல்கள் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்த முகப்புத்தகம் திரைப்படம் கூட நமது இளம் சமூகத்துக்கு ஒரு செய்தியை சொல்லும் படமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் சாட்டிங்கில் ஆரம்பித்து, பின் தொலைபேசியூடாக பேசி, காதல் வயப்பட்டு பின், நேரில் பார்க்க அழைக்கிறாள் அந்தப் பெண்... அப்பொழுது தான் தெரிகின்றது அது பெண் குரலில் பேசி கொள்ளையடிக்கும் கொலைக்காரக் கும்பல் என்று.. இதே போலவே சுகந்திர பறவை போல் சுற்றி திரியும் நான்கு இளைஞர்களில் ஒருவன் இதே போன்ற சம்பவமொன்றில் சிக்கிக் கொள்கிறான். வந்த அந்த தொலைபேசி நபர் யார்..?? இறுதியில் என்ன நடக்கின்றது என்பது தான் படத்தின் கதை..

அழகாக சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது இத் திரைப்படம். காதல் என்ற பெயரில் முகமே அறியாது பலர் தங்கள் மனதுகளைப் பறிகொடுக்கின்றனர். பின் நேரில் பார்கின்ற பொழுது, தங்கள் கனவில்,கற்பனையில் ரசித்த நபர் எதிர்பார்ப்பதைப் போன்று இல்லாதவிடத்து, கனவுகளும் கற்பனைகளும் மணலில் கட்டிய மணல் வீடாய் கரைந்து போகின்றது.


எழுத்து மற்றும் இயக்கம்-அட்லி
ஒளிப்பதிவாளர் - ஜோர்ஜ் கேட்ச் வில்லியம்ஸ்
இசை-நந்தா
பாடல்- நவீன்
ஆசிரியர்-T.S.சுரேஷ்
எழுத்தாளர்கள் - சூர்யா பாலகுமாரன் & ப்ரியாமதன்

எனவே இந்த திரைப்படம் எல்லாருக்கும் நல்லதொரு செய்தியைக் கூறும் படமாக அமைந்துள்ளது. இக்குறுந் திரைப்படத்தில் வரும் பாடல் பின்னணி இசை எல்லாமே அருமை. இறுதியில் அழுத்தமான செண்டிமெண்ட் கொண்டமைந்த கதை. முகப்புத்தம் மூலமாக வரும் நன்மைகளையும், தீமைகளையும் குறுகிய நேரத்தில் சொல்லி முடித்துள்ளார்கள்.

முகப்புத்தகம் பல நூறு மக்களின் முக விம்பங்கள்

தாயை போற்றும் வைரமுத்து

கடந்த 13 ஆம் திகதி பிறந்த நாளைக் கொண்டாடிய கவிப்பேரரசுக்காக எழுதும் பிந்திய பதிவு இது. தமிழ் உலகம் போற்றும் தலை சிறந்த கவிஞர்களில் ஒருவர் வைரமுத்து. அவரின் சமூகச் சூழல், வாழ்க்கை கோலம் என்பன சேர்ந்து ஒரு கவிஞனாக இவரை மாற்றிப்போட்டது. தனது 19வது வயதில் "வைகறை மேகங்கள்" ஊடாக கால் தடம் பதித்தார்.



தொடர்ந்து இவர் எழுதிய "திருத்தி எழுதிய தீர்ப்புகள்" இவரின் வாழ்க்கை பாதையையே திருப்பிப் போட்டது எனலாம். இந்த கவித்தொகுப்பு வைரமுத்துவை பாரதிராஜாவுக்கு அடையாளம் காட்டி நின்றது. பாரதிராஜா 1980ல் தயாரித்த நிழல்கள் திரைப்படத்தில் கன்னிப்பாடல் எழுதினார் வைரமுத்து. அன்று எழுத ஆரம்பித்த இவரது பேனா இன்று 60,000 பாடல்களை கடந்தும் எழுதிக்கொண்டே இருக்கின்றது.


இப்படி சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.. ஆனால் நான் இப்பதிவினூடாக அவரின் வாழ்க்கை வரலாற்றை சொல்ல வரவில்லை. மாறாக அவர் தாயை போற்றும் தலைசிறந்த தமிழ் மகன். அப்படிப்பட்ட வைரமுத்து எப்படியெல்லாம் தான் தாயை போற்றுகின்றார் என்றே சொல்லப்போகின்றேன்.
தன் குழந்தை வைரமா..?? இல்லை முத்தா..?? என்று ஒரு குழப்பம்... அதுதான் இறுதியில் வைரமுத்து என்று வைத்துவிட்டார் போலும்.

உண்மையில் ஆயிரம் கவி சொன்னேனே என்ற கவிதையை கேட்கும் போது அவர் தன் தாய் மீது வைத்திருக்கும் அன்பும், மரியாதையும் தெளிவாக புலப்படுகின்றது. எம் கண்களில் இருந்து கண்ணீரும் எம்மை அறியாமலே அருவியாய் கொட்டுகின்றது.

அப்படிப்பட்ட வைரமுத்துவுக்கு என்மனதில் ஒரு கவிதை துளிர் விடுகின்றது.

"ஆயிரம் கவி சொன்னேனே.. என் தாய்க்கு ஈடாகுமா..?? இது உன் கவி.
முப்பதாண்டுக்கு மேல் கவி எழுதுகின்றாயே..
3 மணிநேர நிகழ்ச்சியில் உன் புகழை எப்படிச் சொல்வேன்...?? இது என் கவி.
தாயை போற்றும் தலை சிறந்த மகன் நீயடா.. தாய் மண் போற்றும் தலை சிறந்த தமிழ் மகன் நீயடா...!!

உன் தாய்க்கும் குழப்பம்... நீ வைரமா..?? இல்லை முத்தா..?? என்று..
இறுதியில் வைத்துவிட்டால் வைரமுத்து என்று...
உன் கவி வரிகளைக்கேட்டு எனக்கும் ஒரு குழப்பம் தான்.. அது வைரமா..?? இல்லை முத்தா..?? என்று..
இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தேன் அது இரண்டரக்கலந்தவை என்று.....!!"

வைரமுத்துவின் பிறந்தநாளன்று காலை நேர நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது தான் உணர்ந்தேன்.. எதை தெரிவு செய்து ஒலிபரப்புவதென்று தெரியாமல். அப்படிப்பட்ட ஒரு கவிஞனின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 3 மணித்தியாலங்கள் என்ன 30 மணித்தியாலங்கள் கூட போதாது.
அதுவும் நான் பணி புரியும் வானொலி இசை கலைஞர்களின் சுகந்திரமான இசை படைப்புக்களை மட்டும் ஒலிபரப்பும் வானொலி. ஆகவே சினிமா பாடல்கள் இல்லாமலும், சினிமாவைப் பற்றி பேசாது தனியே கவிப்பேரரசின் சாதனைகளையும், அவரது கவித்தொகுப்புக்களையும் மாத்திரமே ஒலிபரப்பி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டியிருந்தது. இவை எல்லாவற்றையும் தாண்டி நிகழ்ச்சியை சிறப்புறப் படைத்திருந்தேன்.


இப்படிப்பட்ட வைரமுத்து தன் பிறந்த தினத்தன்று, தன்னை ஈன்றெடுத்த தாயைப் போற்றி பேசிய சிறப்புப் பேட்டி சூரியன்FM இல் அஷ்ரப் in "கள்ள மனத்தின் கோடியில்" பகுதியில் ஒலித்தது. அந்த சிறப்புப் பேட்டியினை உங்களுக்காக இங்கு இணைத்துள்ளேன்.


அத்துடன் என்மனதைக் கவர்ந்த வைரமுத்துவின் கவிதைகளில் ஒன்று "இது போதும் எனக்கு..." அந்த கவிதை பாடலாக கேட்கும் போது மேலும் புத்துயிர் பெறச் செய்கின்றது. ஸ்ரீநிவாசின் அழகான குரலில் அப்பாடலை காலை வேளையில் கேட்கும் பொழுது எங்கிருந்தோ ஒரு புது உற்சாகம் பிறக்கின்றது.

கவிப்பேரரசின் குரலில் அக்கவிதை....



அதிகாலை ஒலிகள்
ஐந்துமணிப் பறவைகள்
இருட்டு கதவு தட்டும் சூரியவிரல்
பள்ளியெழுச்சி பாடும் உன்
பாதக்கொலுசு
உன் கண்ணில் விழிக்கும்
என் கண்கள்
இதுபோதும் எனக்கு

தண்ணீர் போலொரு வெந்நீர்
சுகந்தம் பரப்பும் துவாலை
குளிப்பறைக்குள் குற்றாலம்
நான் குளிக்க நனையும் நீ
இதுபோதும் எனக்கு

வெளியே மழை
வேடிக்கை பார்க்க ஜன்னல்
ஒற்றை நாற்காலி
அதில் நீயும் நானும்
இதுபோதும் எனக்கு

குளத்தங்கரை
குளிக்கும் பறவைகள்
சிறகு உலர்த்தத்
தெறிக்கும் துளிகள்
முகம் துடைக்க உன் முந்தானை
இதுபோதும் எனக்கு

நிலா ஒழுகும் இரவு
திசை தொலைத்த காடு
ஒற்றையடிப்பாதை
உன்னோடு பொடிநடை
இதுபோதும் எனக்கு

மரங்கள் நடுங்கும் மார்கழி
ரத்தம் உறையும் குளிர்
உஷ்ணம் யாசிக்கும் உடல்
ஒற்றைப் போர்வை
பரஸ்பர வெப்பம்
இதுபோதும் எனக்கு

நிலாத் தட்டு
நட்சத்திரச் சோறு
கைகழுவக் கடல்
கைதுடைக்க மேகம்
கனவின் விழிப்பில்
கக்கத்தில் நீ
இதுபோதும் எனக்கு

தபோவனக் குடில்
தரைகோதும் மரங்கள்
நொண்டியடிக்கும் தென்றல்
ஆறோடும் ஓசை
வசதிக்கு ஊஞ்சல்
வாசிக்கக் காவியம்
பக்க அடையாளம் வைக்க
உன் கூந்தல் உதிர்க்கும் ஓரிரு பூ
இதுபோதும் எனக்கு

பூப்போன்ற சோறு
பொரிக்காத கீரை
காய்ந்த பழங்கள்
காய்கறிச் சாறு
பரிமாற நீ
பசியாற நாம்
இதுபோதும் எனக்கு

மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம்
பிரம்பு நாற்காலி
பிரபஞ்ச ஞானம்
நிறைந்த மௌனம்
நீ பாடும் கீதம்
இதுபோதும் எனக்கு

அதிராத சிரிப்பு
அனிச்சப்பேச்சு
உற்சாகப்பார்வை
உயிர்ப் பாராட்டு
நல்ல கவிதைமேல்
விழுந்து வழியும் உன்
ஒரு சொட்டுக் கண்ணீர்
இருந்தால் போதும்
எதுவேண்டும் எனக்கு
?


ஸ்ரீநிவாஸ் இன் குரலில் உருவாக்கப்பட்ட அப்பாடலை இணைக்க முடியாமல் போனதுக்கு மனம் வருந்துகின்றேன்.

உண்மையில் என்னைப் பொருத்தமட்டில் கவிப்பேரரசு வைரமுத்து, இவ்வுலகிலே தாயை போற்றுகின்ற மிகச் சிறந்த ஒரு தலை மகனாகவும், தமிழ் மகனாகவும் நான் காண்கின்றேன். காரணம் இந்தளவுக்கு யாரும் தன் தாயை போற்றியிருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை..!

நெஞ்சில் நின்ற ராகம்

வணக்கம் உறவுகளே...!! வாரா வாரம் நெஞ்சில் நின்ற ராகம் பகுதியூடாக மனது மறக்காத இனிய இடைக்காலப் பாடல்களை, வெள்ளிக்கிழமை தோறும் பகிர்ந்து வருகின்றேன்.. அந்தவகையில் இவ்வாரமும் ஒரு அருமையான இடைக்காலப் பாடல் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.


இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகும் பாடல் ஊமை விழிகள் திரைப்படத்துக்காக இடம் பெற்ற "மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா...."


இத்திரைப்படம் 1986 ஆண்டு, R. அரவிந்தராஜ் இன் இயக்கத்தில் மனோஜ் கயனின் மனதை வருடும் அற்புதமான இசையமைப்பில் விஜயகாந்த், கார்த்திக், ஜெய்ஷங்கர், சரிதா, அருண்பாண்டியன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் எனலாம்.

பாடல் வரி..

"மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா
கண்ணே புது நாடகம்...
விரைவில் அரங்கேறிடும்...

மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா...
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா...

கூந்தலில் பூச்சூடினேன்... கூடலையே நாடினேன்
கூடிவிட மனது துடிக்குது... ஒ...ஒ...
கூடவந்த நாணம் தடுக்குது...

கூந்தலில் பூச்சூடினேன்... கூடலையே நாடினேன்
கூடிவிட மனது துடிக்குது...
கூடவந்த நாணம் தடுக்குது...
கடலோடு பிறந்தாலும் இந்த அலைகள் ஏங்குது...
உடலோடு பிறந்தாலும் இந்த மனமும் ஏங்குது....

மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா....
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா....

சித்திர பூவிழி பாரம்மா... சிற்றிடை மெலிந்த தேனம்மா..
பத்து விரல் அணைக்கத் தானம்மா ..ஓ...
முத்து ரதம் எனக்குத் தானம்மா...

சித்திர பூவிழி பாரம்மா... சிற்றிடை மெலிந்த தேனம்மா..
பத்து விரல் அணைக்கத்தானம்மா..
முத்து ரதம் எனக்குத்தானம்மா..

உனக்காக உயிர் வாழ இந்த பிறவி எடுத்தது...
உயிரோடு உயிரான இந்த உறவு நிலைத்தது...

மாமரத்து பூ எடுத்து மங்கை என்னை தேடிவா...
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி ஓடிவா...
கண்ணா புது நாடகம்...
விரைவில் அரங்கேரட்டும்ம்.....

மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடலாம்..
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடலாம்...!!



பொதுவாக இத்திரைப்படப் பாடல்களைக் கேட்டால் எல்லாரும் சொல்லுவார்கள் இளையராஜா தான் இசையமைத்துள்ளார் என்று.. ஆனால் உண்மை அதுவல்ல... மனோஜ் கயன் தான் இசையமைத்துள்ளார். இளையராஜாவின் இசைக்கு நிகராக அவருடைய இசையமைப்பு பாணி அமைந்துள்ளது எனலாம். ஆகவே பாடலை கேட்போருக்கு நிச்சயம் இளையராஜா தான் என்று மனது கூறும்.

இப்பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் ஆபாவாணன். பாடலை பாடியோர் B.S.சசி ரேக்ஹா மற்றும் S.N.சுரேந்தர். பாடகி சசி ரேக்ஹாவின் குரல் சின்னக்குயிலாய் ஒலிக்கின்றது.

மீண்டும் அடுத்த வாரம் மற்றுமொரு நெஞ்சில் நின்ற ராகத்துடன் சந்திக்கின்றேன்..

ரயில் விபத்துக்கள்

உலகில் இடம்பெறும் செயற்கை அனர்த்தங்களில் விபத்துக்களும் உண்டு. அதில் தொடரூர்ந்து விபத்தும் முக்கிய இடம் வகிக்கின்றது. அந்தக்காலம் தொட்டு பாரிய பல்வேறுபட்ட கோரமான புகையிரத விபத்துக்கள் நிகழ்ந்திருக்கின்றது. ஒரு சிறிய தவறால் பல கோரமான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கள் கூட வரலாற்றில் பதியப்பட்ட நிகழ்வாக, வரலாற்றின் ரணங்களாக காணப்படுகின்றது. அப்படிப்பட்ட அரிய புகைப்படங்களை இப்பதிவினூடாக உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்..!!

Train wreck at Montparnasse in Paris, France, 1895:

Train wreck in Ukraine, ca 1917:

Wreckage of Soviet Army train on the way to World War II battle lines, and a wreck of the German supply train:

Modern Times

Some of the nameless Russian train wrecks (not much information about those, sadly). Pictures via Russian RailRoad Club:

All over the place... (this accident happened in June 2006 in Toronto, Canada, no one was hurt)

Canadian National engines vs. a landslide

Climbing higher, and higher... No brakes on this "metro" train in Hungary

More than 1,000 repurposed New York City Subway cars were sunk off the eastern seaboard - to serve as a sort of a marine barrier, and as a playground for scuba divers

This one has quite a ways to go down... "The high winds of 17 February 2006 have pushed this freight train off off of its tracks while it was crossing a bridge over the St-Laurence River on its way Montreal.

When used train cars can no longer be serviceable, they get transformed (in a very practical-minded Russia, of course) into trailers and.... churches

Utterly Surreal: Tilt-Shift Train Wrecks